Wednesday 1st of May 2024 12:08:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பிய மூவருக்கு மூதூரில் கொரோனா!

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று திரும்பிய மூவருக்கு மூதூரில் கொரோனா!


பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனத்தில் மீன் கொண்டு சென்று திரும்பிய திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்ற அடிப்படையில் கடந்த 24ஆம் திகதி 16 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று பிற்பகல் 3 மணிமுதல் மூதூர் பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து விற்பனை நிலையங்களும் மூடப்படுவதுடன் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பூசை வழிபாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE